கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் தொடர்பான திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யக்கூடிய இணையவழி முறைமையொன்றைத் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் காலங்களில் இது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கடவுச் சீட்டை பெற்றுக்கொள்வதற்காக பத்தரமுல்லை குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு அருகே மக்கள் தொடர்ந்தும் நீண்ட வரிசையில் காத்திருப்பதனை அவதானிக்க முடிந்துள்ளது.
நேற்றைய தினம் விடுமுறை நாளாக இருந்த போதிலும் மக்களின் வரிசை காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இன்றைய தினம் வெவ்வேறு பகுதிகளிலிருந்து பத்தரமுல்லை குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்குச் சென்றிருந்த மக்கள் கடவுச் சீட்டை பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் காத்திருக்கின்றனர்.
அடிப்படை சுகாதார பாதுகாப்பு வசதிகள் இன்றி வரிசையில் காத்திருப்பதாக அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான, பின்னணியில் கடவுச் சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு நாளாந்தம் 750 முதல் 1400 வரையான டோக்கன்கள் மாத்திரமே விநியோகிக்கப்படுகின்றன.
0 Comments