Hot Posts

6/recent/ticker-posts

மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில் பாலத்தை உடைத்து விபத்துக்குள்ளான கார்

மட்டக்களப்பு (Batticaloa) வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் நேற்று (13.02.2025) பிற்பகல் கார் ஒன்று விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியிலிருந்த பாலத்தின் ஒரு பகுதியை உடைத்து நீரோடையில் விழுந்துள்ளது.

இதன்போது காரில் பயணித்தவர்கள் 03 பேர் காயமடைந்து களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments