Hot Posts

6/recent/ticker-posts

வவுனியா நகரில் சைவ உணவகத்தின் மீது தாக்குதல் – ஒருவர் கைது!

வவுனியா நகரப் பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (03.03) இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவல்கள்

வவுனியா நகர மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகிலுள்ள சைவ உணவகத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

சில இளைஞர்கள் குறித்த உணவகத்திற்குள் சென்றபோது, அவர்களில் ஒருவரின் கையில் பியர் பாட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர், அந்த இளைஞர் பியர் பாட்டிலால் உணவகத்தின் கண்ணாடிப் பெட்டியின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதன் காரணமாக கண்ணாடிப் பெட்டி உடைந்து சேதமடைந்தது.

உணவக உரிமையாளர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வவுனியா பொலிசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை மேலதிக விசாரணைகள் முடிந்ததும் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகரில் சமீபத்தில் ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் பொலிசார் கண்காணிப்பை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments