காவ்யா மார்ச் 2 ஆம் திகதி மாலை 5:30 மணியளவில் இங்கிரிய பல்பொருள் அங்காடியில் பணி முடித்து வெளியேறிய பின்னர் காணாமல் போனார். அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அவரைத் தேடி முறைப்பாடு அளித்தனர். பொலிஸ் விசாரணையில், காவ்யாவுடன் தொடர்பில் இருந்த ஹல்வத்துர பகுதியைச் சேர்ந்த 30 வயது ஆசிரியர் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த ஆசிரியர், காவ்யா தனக்கு இரண்டு முறை தொலைபேசியில் அழைத்ததாகவும், அதன் பின்னர் எந்த தகவலும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
இந்த விசாரணைகள் நடந்து கொண்டிருக்கும் போது, மார்ச் 7 ஆம் திகதி, அதே நாளில் காவ்யாவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அந்த ஆசிரியர் ஹல்வத்துரவில் உள்ள வீடொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக புலத்சிங்கள மற்றும் இங்கிரிய பொலிஸ் நிலையங்கள் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
0 Comments