Hot Posts

6/recent/ticker-posts

மன்னாரில் விபத்து: ஒருவர் உயிரிழந்தும், மூவர் காயமடைந்தும்

மன்னார் – இன்று (22ம் தேதி) அதிகாலை, பள்ளமடு பெரியமடு பிரதான வீதியில் இடம் பெற்ற ஒரு விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து, பெரியமடு பிரதான வீதியூடாக பயணித்த டிப்பர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வீழ்ந்ததைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ளது.

வாகனத்தில் பயணித்த நான்கு நபர்களில், ஈச்சளவக்கை கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சாரதி உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த மூவரும் உடனடியாக மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களில் இருவரை மேலதிக சிகிச்சைக்காக யாழ். வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பியுள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விபத்துக்கான விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments