அகலவத்தையைச் சேர்ந்த 33 வயது டி.டி.மதுஷானி என்ற விவாகரத்து பெற்ற இளம் பெண், மோட்டார் சைக்கிளில் தென்னந்தோப்புப் பகுதியில் அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து மத்துகம தலைமையகப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுஷானி, திருமணமாகி பின்னர் விவாகரத்து பெற்றவர். அவ்வழியாக அவர் அகலவத்தை பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவருடன் காதல் உறவில் இருந்துள்ளார். ஏப்ரல் 18ஆம் திகதி இருவரும் மோட்டார் சைக்கிளில் தென்னந்தோப்புப் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பின்னர், கூரிய ஆயுதமொன்றினால் கழுத்தில் தாக்கி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் வீதியில் கிடந்த பெண்ணின் உடலை கண்டுள்ள உள்ளூர்வாசிகள், உடனடியாக காவல்துறைக்கு தகவல் வழங்கினர். இச்சம்பவம் தொடர்பாக சந்தேகிக்கப்படும் காதலன் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும், அவரது பிடிப்புக்காக மூன்று விசேட போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மத்துகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 Comments