சம்மாந்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற நிலையில் காணப்பட்ட ஒரு கிணற்றில் மூழ்கி, மூன்று வயதுடைய சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து காவல்துறைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்தனர். அவர்கள் மேற்கொண்ட சோதனையின் போது, குறித்த பாதுகாப்பற்ற கிணற்றில் சிறுவன் நீரில் மூழ்கிய நிலையில் காணப்பட்டார்.
சிறுவனை சம்மாந்துறை வைத்தியசாலையில் அழைத்துச் செல்லப்பட்டது. எனினும், வைத்தியர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments