வெற்றிக்கு மரியாதை தேவை — வெறுப்புக்கு இல்லை
"காலுக்கு மேல கால் போட்டால் நாலு சம்பளம் எனக்கு"
இந்த சொடக்கில் சவால் இருக்கலாம்,
ஆனா அதே நேரத்தில், மற்றவரை இழிவுபடுத்தும் ஒரு அகங்காரம் கூட இருக்கிறது.
நீங்கள் எத்தனை உயர்ந்தாலும்,
பிறர் மீது அவமதிப்பாக பேசி விட்டால்,
உங்கள் உயரம் வெறும் உள்ளமை இல்லாத மேடையே.
உங்கள் பெருமைகள் பாராட்டத்தக்கவை.
ஆனால் அதே நேரத்தில்,
பிறர் வாழ்க்கையை நக்கலடிப்பது, அவமதிப்பது, கிண்டல் செய்வது தவறு.
ஒருத்தர் உங்களை தவறாக பேசியிருப்பார்.
அவரை நேரடியாக எதிர்த்து வாதியுங்கள்.
ஆனால் அந்த ஒருவருக்காக முழு சமூகத்தை, முழு நாட்டை இழிவாகப் பேச முடியாது.
நீங்கள் இன்று எங்கு இருந்தாலும்,
கீழிருந்து மேல் வந்த ஒரு பயணம்தான் அது.
அதனால், உங்களுக்கு இன்னொருவரின் நிலையை புரிந்து கொள்ளும் கடமை இருக்கிறது.
ஒருவர் முதியோரை பராமரிக்கிற வேலை செய்கிறார்கள் என்றால்,
அது பெருமைபட வேண்டிய விஷயம்.
வெற்றிக்குப் பெருமை இருக்கட்டும்,
ஆனால் மனிதக்குணத்தில்தான் மதிப்பு இருக்கிறது.
வாழும் சமூகத்துக்கு மரியாதை கொடுக்காத உயர்வு,
மண்ணில் விழும் போது ஒரு தூசிக்கணமும் இருக்காது.
0 Comments