யாழ்ப்பாணம் – திருநெல்வேலி வீதியில் இடம்பெற்ற கோரமான வாகன விபத்தில், சரவணபவன் மகேஸ்வரி (வயது 82) என்ற மூதாட்டி உயிரிழந்துள்ளார்.
வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த டிப்பர், திடீரென இயக்கத்தில் ஈடுபட்டபோது, பாதையோரமாக நடந்துசென்ற மூதாட்டியை மோதியதுடன், அவர் மீது ஏறியதால், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 33 வயதுடைய டிப்பர் சாரதி, கோப்பாய் போக்குவரத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரியான நமச்சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
0 Comments