யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி பகுதியில் அமைந்திருந்த வீடொன்றில் சட்டவிரோதமாக விபச்சாரம் நடைபெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில், குறித்த இடம் நேற்று (09) யாழ் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவுப் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டது.
நாவற்குழி புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் அமைந்திருந்த அந்த வீடு, சந்தேகத்திற்கிடமான முறையில் இயங்கி வந்தது. அதனை முற்றுகையிட்ட பொலிஸார், 68 வயதான வீட்டின் உரிமையாளரை கைது செய்ததுடன், அளவெட்டி, குருநகர், கொடிகாமம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 40, 42 மற்றும் 53 வயதுடைய மூன்று பெண்களையும் கைது செய்துள்ளனர்.
கைதான நால்வரும் மேலதிக விசாரணைகளுக்குப் பின்னர், சாவகச்சேரி பொலிஸாரின் முயற்சியில் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
0 Comments