அரியானா மாநிலத்தின் ஹிஸார் மாவட்டம் பிரேம் நகரில் நடந்த இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
32 வயதான ரவீனா, 35 வயதான தனது கணவர் பிரவீனுடன் வாழ்ந்து வந்தவர். இவர்களுக்கு 6 வயதில் மகன் உள்ளார். சமீபகாலமாக ரவீனாவுக்கு சுரேஷ் என்ற நபருடன் இன்ஸ்டாகிராமில் நட்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் இருவரும் இணைந்து யூடியூப்பில் ஷார்ட்ஸ் வீடியோக்கள் உருவாக்கி புகழ் பெற்றனர். இவர்களது சேனலுக்கு 34,000 பின்தொடர்பவர்கள் இருந்தனர்.
இதற்கிடையில், கணவர் பிரவீன் இந்த உறவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் ரவீனா அதனை பொருட்படுத்தாமல், சுரேஷுடன் தொடர்ந்து வீடியோக்கள் எடுத்து வந்தார். கடந்த மார்ச் 25 அன்று, ரவீனா மற்றும் சுரேஷை இரகசியமான நிலையில் பார்த்த பிரவீன், மோதலுக்கு உட்பட்டார்.
இந்த தகராறின் போதே, இருவரும் சேர்ந்து பிரவீனை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை மோட்டார் சைக்கிளில் 6 கி.மீ தூரத்தில் உள்ள வடிகாலில் வீசினர்.
மார்ச் 28 அன்று அந்த சாக்கடையில் பிரவீனின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அதன் பின்னர் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய, இந்த கொலை சம்பவம் வெளியாகியது. தொடர்ந்து நடந்த விசாரணையில் ரவீனா மற்றும் சுரேஷ் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments