Hot Posts

6/recent/ticker-posts

யாழ் வடமராட்சி உடுத்துறையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

யாழ் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் இன்று (8 ஆம் திகதி) அதிகாலை, போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த நபர் உடுத்துறை கடற்பகுதியில் கடற்படையால் முற்றுகையிடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வைத்தியத்தில் 8 உரப்பைகளில் ஈரமான நிலையில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், கைது செய்யப்பட்ட நபரும், அவரிடம் இருந்து மீட்கப்பட்ட போதைப்பொருளும் மருதங்கேணி பொலிஸாரிடம் சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கைது செய்யப்பட்ட நபர், யாழ் கட்டைக்காட்டு பகுதியை சேர்ந்தவர் எனவும், சில மாதங்களுக்கு முன்பு கூட கடற்படையால் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்த பின் சமீபத்தில் விடுவிக்கப்பட்டவராகவும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments